search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் மீட்பு"

    • காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால் அச்சம் அடைந்தார்.
    • சிறுவன் தஞ்சாவூர் அருகே உள்ள மேலவழுத்துரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    கோவை,

    மேட்டுப்பாளையம் போலீசார் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது 17 வயது சிறுவன் பள்ளி சீருடையில்எங்கு செல்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தான். இதனை பார்த்த போலீசார் அந்த சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த சிறுவன் தஞ்சாவூர் அருகே உள்ள மேலவழுத்துரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் சிறுவனிடம் போலீசார் வீட்டை விட்டு எதற்காக வந்தாய் என விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் படிக்கும் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. 2 பேரும் 5 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த காதல் விகாரம் பள்ளி ஆசிரியருக்கு தெரிய வந்தது. அவர் இது குறித்து தலைமை ஆசிரியர் மூலமாக எனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் வீட்டிற்கு செல்வதற்கு பயந்து தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ரெயில் மூலமாக சென்று அங்கு இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வந்தது தெரிய வந்தது. சிறுவனை மீட்ட போலீசார் இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர். மேலும் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×